எம்.பி. ஒதுக்கீடு ரத்து . - kalvikalam

வியாழன், 28 ஏப்ரல், 2022

எம்.பி. ஒதுக்கீடு ரத்து .



எம்.பி ஒதுக்கீடு
முறைப்படி ஒவ்வொரு
நாடாளுமன்ற
உறுப்பினருக்கும் அவரவர்
தொகுதிக்கு உட்பட்ட
கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் ஆண்டுக்கு 1 முதல் 9ம் வகுப்பு வரையில்
மொத்தம் 10 மாணவர்களை சேர்த்துவிடும் அதிகாரம் இருந்தது.
இந்த நடைமுறையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள சீட்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் இல்லையென்றால்
இந்த நடைமுறையையே ரத்து செய்ய வேண்டும் என்றும்
கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்
நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, எம்.பி.க்கள் ஒதுக்கீடு, கல்வி அமைச்சகத்தின்
ஊழியர்களில் 100 பேரின் குழந்தைகளுக்கு சீட், எம்.
பி.க்களின் குழந்தைகள், பேரப் பிள்ளைகள், கேந்திரிய
வித்யாலயா ஓய்வு பெற்ற ஊழியர்களின் பேரப் பிள்ளைகள்,
பள்ளி நிர்வாகக் குழு சேர்மனின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ்
வழங்கப்படும் சீட் போன்ற அனைத்து ஒதுக்கீடுகளும் ரத்து
செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், சில புதிய ஒதுக்கீடுகளும்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய போலீஸ் படையான
சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், ஐ.டி.பி.பி, எஸ்.எஸ்.பி, சி.ஐ.எஸ்.எப்,
என்.டி.ஆர்.எப், அசாம் ரைஃபில்ஸ் படையில் பணியில் உள்ள
குரூப் பி, சி ஊழியர்களின் குழந்தைகளுக்காக 50 சீட்டுகள்
ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பி.எம் கேர்ஸ் திட்டத்தின்
கீழ் சலுகைகள் பெறத் தகுதியான குழந்தைகளுக்கும்
இப்பள்ளிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot